வீட்டு வசதி வாரிய வீடுகள் பெற வட்டிக்கு மேல் வட்டி வசூலிக்கும் அதிகாரிகள் - மாவட்ட ஆட்சியரிடம் புகார்

வீட்டு வசதி வாரியத்தால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பணம் கட்டியும் தற்போது வரை பத்திரம் கொடுக்காமல் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி வட்டிக்குமேல் வட்டி வசூலிக்கும் அதிகாரிகளைக் கண்டித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒருங்கிணைப்பு ஒதுக்கீட்டாளர்கள் நலச்சங்கத்தின் சார்பாக வாயில் கருப்பு துணிகட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்டம் கணபதி மாநகர் மற்றும் உப்பிலிபாளையம் உட்பட பல பகுதிகளில் 7000-க்கும் மேற்பட்டவர்களுக்கு வீட்டு வசதி வாரியத்தால் 1991- 1992 ஆம் ஆண்டுகளில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதேப்போல தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை தமிழகம் முழுவதும் 37,000 வீடுகளுக்கு பத்திரம் வழங்கப்படால் இழுத்தடிக்கப்படுகிறது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளுக்கு பயனாளிகள் அப்போதே முழுத்தொகையை கொடுத்தும் இதுவரை பத்திரம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் வீட்டு வசதி வாரியத்திற்கு நிலம் அளித்தவர் அதிக தொகை கேட்டு வழக்கு தொடர்ந்ததையடுத்து அவருக்கு பணம் கொடுக்க பயனாளிகளிடம் அதிக தொகை கேட்டுள்ளனர்.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் பயனாளிகள் வழக்கு தொடர்ந்ததில் 6000 ரூபாய் சென்ட்க்கு கட்டினால் போதும் என்று தீர்ப்பு கூறியது. இந்த தொகையை கட்ட பயனாளிகள் தயாராக இருந்தும் வீட்டு வசதி வாரியம் சென்ட்டுக்கு இரண்டு முதல் மூன்று லட்சம் ரூபாய் கேட்பதாகவும், 1995 லிருந்து 2001 வரை இதற்கான வட்டியை கட்ட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. 

அப்போதையை முதலமைச்சர் ஜெயலலிதா, வருடத்திற்கு ஐந்து மாதம் கழித்துவிட்டு மீதி வட்டியை கட்ட ஆணை பிறப்பித்தார். உச்ச நீதிமன்றம் மற்றும் மாநில அரசு அளித்த தீர்ப்பை நிறைவேற்றாமல் வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் 25 ஆண்டுகளுக்கு பணம் கட்டுமாறு வற்புறுத்துவதாக குற்றம் சாட்டினார்.

மேலும், வட்டிக்கு மேல் வட்டி போட்டு பயனாளிகளை துன்புறுத்துவதாகவும், 1992 ஆம் ஆண்டு வீடு வாங்கியவர்கள் பாதிபேர் இறந்து விட்டதாகவும், 25 ஆண்டுகளாக இன்னும் பட்டா கிடைக்கவில்லை என்பதால் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வாயில் கருப்புதுணி கட்டி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒருங்கிணைப்பு ஒதுக்கீட்டு சங்கத்தின் சார்பாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்று மனு அளித்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...