நீட் தேர்வுக்கு எதிராக கோவையில் இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வு, பல்வேறு வழக்குகளுக்குப் பின் நடத்தப்பட்டது. 'நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக் கூட்டங்கள் நடந்தன.



இந்நிலையில், 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா 1176 மதிப்பெண்கள் எடுத்திருந்த நிலையில், நீட் நுழைவுத் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இருப்பினும், நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெற்று வந்தது.

தொடர்ந்து, நீட் தேர்விற்கு எதிராக அனிதா போராடி வந்த நிலையில் தொடர் மனஅழுத்தத்தின் காரணமாகவும், மருத்துவப் படிப்பிற்கான வாய்ப்புகள் பரிக்கப்பட்டதன் விரக்தியினாலும் செப்டம்பர் 1ம் தேதியன்று மாணவி அனிதா தற்கொலை செய்து உயிரிழந்தார்.



இதனால், ஆவேசமடைந்த தமிழக மக்கள், பள்ளி- கல்லூரி மாணவர்கள், அரசியல் அமைப்பினர் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன்படி, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும். அனிதா மரணத்திற்கு நீதி கோரியும் கோவையில் இன்று இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவர்கள், 'எங்கள் போராட்டத்திற்கு மத்திய மாநில அரசுகள் செவிசாய்க்கவில்லை. அதன்காரணமாகவே இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றோம். மேலும், அரசு இந்த போக்கை கடைபிடித்தால் எங்கள் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு நகரும்' என்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...