நீட் தேர்விற்கு விலக்குகோரி கோவையில் திமுக தலைமையில் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வை கட்டாயமாக்கியதன் காரணமாக 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றிருந்தும் மருத்துவ படிப்பிற்கு 196 கட் ஆப் பதிப்பெண் பெற்றிருந்தும் நீட் தேர்வினால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் போன அரியலூர் மாணவி அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதனைத்தொடர்ந்து, அனிதாவின் மரணத்திற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர் அமைப்பினர், பொதுமக்கள், தன்னார்வலர்கள், வழக்கறிஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, இன்று கோவை மாவட்ட தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக தலைமையில் நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள்விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் மத்திய அரசிற்கு எதிராகவும், மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத தமிழக அரசிற்கு எதிராகவும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், நீட் தேர்வினால் உயிரிழந்த மாணவி அனிதாவிற்கு நியாயம் கிடைக்க வேண்டும். ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவப் படிப்பை பாதிக்கும் நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டன.



திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு திமுக பொறுப்பாளர் முத்துசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...