கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரவு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர்

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் இரவு முழுவதும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈட்டுபட்டுள்ளனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,8 வது ஊதிய குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையிலும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் இரவு முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதற்காக அரசு ஊழியர்களால் ஆட்சியர் அலுவலகத்தில் இரவு உணவு சமைக்கப்பட்டது. இரவு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வரும் காத்திருப்பு போரட்டத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட சுமார் 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதையடுத்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காவல்துறையினர் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். கோவையில் அவ்வப்போது மழை பெய்ந்த நிலையிலும் போராட்டத்தை அரசு ஊழியர்கள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...