நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து விமென் இந்தியா மூமெண்ட்டைச் சேர்ந்த பெண்கள் போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யவும், அனிதா தற்கொலைக்கு நீதி கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீட் தேர்வுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி தொடர்ந்த பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதியளித்திருந்தது.

இந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவி அனிதா மரணத்திற்கு நீதி வேண்டி வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மகளிர் அணியான விமன் இந்தியா மூமெண்ட்டைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தினர்.



விமன் இந்தியா மூமெண்ட்டின் மாவட்ட தலைவர்  ஃப்ரீத்தா பேகம் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில், மத்திய மாநில அரசுகளே அனிதா மரணத்திற்கு காரணம் என்றும், உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பினர்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...