நீட் எதிர்ப்பு போராட்டத்தில் கைகோர்த்த ஜேக்டோ- ஜியோ அமைப்பினர்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் பணிகளை புறக்கணித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசு அலுவல் பணிகள், பள்ளிக் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், தங்களது ஊதிய பிரச்சனை மட்டுமின்ற மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வினை ரத்து செய்யக் கோரியும், உயிரிழந்த மாணவி அனிதாவிற்கு நீதிகோரியும் ஜேக்டோ- ஜியோ அமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ- ஜியோ அமைப்பைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்டோர் இணைந்து இன்று 7-வது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்தில், குடையுடனும், பிச்சை எடுக்கும் வகையில் நாமத்துடனும் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.



இதனிடையே, ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் ஆசிரியர்களின் ஊதியத்தில் இருந்து மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



மேலும், போராட்டத்தை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த விளக்கத்தையும் தமிழக அரசு நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டிருந்தார்.

ஏற்கனவே அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும், விடுப்பில் செல்லக்கூடாது என்றும் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் தமிழக அரசு அழைப்பு விடுத்தது. அதையும் மீறி போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக நோட்டீசு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, தற்போது தற்காலிக வேலை நீக்கம் செய்யக்கூடிய 17-பி நோட்டீசு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு அந்தந்த துறை அதிகாரிகள் விளக்க நோட்டீசை தபால் மூலமாகவும், நேரிலும் வழங்கி வருகிறார்கள்.

கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் விளக்க நோட்டீசை தலைமை ஆசிரியர்கள் மூலமாக வழங்குகிறார்கள். அரசு ஊழியர்களுக்கு அந்தந்த துறையைச் சேர்ந்த தலைமை அதிகாரிகள் வினியோகித்து வருகின்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...