டிரைவிங் லைசன்ஸ் உடன் ஆதார் இணைப்பா?

ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமத்தை இணைக்க திட்டமிட்டு வருவதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.



டிஜிட்டல் ஹரியானா மாநாடு-2017 நிகழ்ச்சியில் ரவிசங்கர் பிரசாத் பேசுகையில் டிரைவிங் லைசன்ஸ் உடன் ஆதார் இணைப்பது குறித்த அறிவிப்பினை வெளியிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில், "ஓட்டுநர் உரிமத்தை ஆதார் எண்ணுடன் இணைக்க மத்திய அரசின் சார்பில் திட்டமிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின்கட்காரி உடன் பேசியுள்ளேன். பான் கார்டு மற்று வங்கி கணக்குகளுடன், ஆதார் எண்ணை இணைத்தது பண மோசடிகளை தடுப்பதற்காகவே.

டிஜிட்டல் அடையாளம் தொழில்நுட்ப உதவியுடன் உடல் அடையாளங்களை ஆதார் உறுதி செய்கிறது. இது சிறந்த அரசாங்கம் மற்றும் அதிகாரமளித்தலுக்கு முக்கிய கருவியாக உள்ளது. டிஜிட்டல் அரசாங்கமானது மிகவும் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படும்" என்று அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே, ஆதார் எண் பல்வேறு விவகாரங்களுக்கு கட்டாயமக்கப்பட்டு வருவதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்துவரும் இச்சூழ்நிலையில் மக்களின் போராட்டம் மற்றும் பாதுகாப்புத் தண்மையை கண்டுகொள்ளாமல் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. மேலும், வங்கி, பான், கேஸ், தொலைபேசி எண் என அனைத்து தனிமனிதர் உரிமையினையும் பரிக்கும் வகையிலேயே இந்த ஆதார் உள்ள நிலையில் தற்போது ஓட்டுநர் உரிமத்துடனும் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...