கோவையில் மாயமான மாணவிகள் கோழிக்கோட்டில் பத்திரமாக மீட்பு

கோவை நல்லாம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அமிர்தா வித்யாலயா பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகள் நேற்று(15.09.2017) காலை மாயமாகினர். இதனையறிந்து பதறிப் போன சிறுமிகளின் பெற்றோர்கள், இரண்டு சிறுமிகளும் மாயமானதற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும், சிறுமிகளை மீட்டுதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதனிடையே, மாணவிகள் இருவரும் கடத்தப்பட்டனரா? அல்லது பள்ளியை புறக்கணித்து எங்கேயாவது சென்றுள்ளனரா? என்ற கோணங்களில் துடியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், மாணவிகள் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இருப்பதாக ரயில்வே போலீசார் கோவை மாநகர போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், அமிர்தா வித்யாலயா பள்ளியில் இருந்து மாயமான குழந்தைகளா என்பதை முதலில் உறுதி செய்தனர். பின்னர், மாணவிகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...