கோவை மத்திய சிறையில் கடந்த மூன்று வாரங்களில் 5 கைதிகள் பலி

கோவை மத்திய சிறையில் பல்வேறு குற்றங்களில் தண்டனை பெற்றுள்ள 1,800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சமீப காலங்களாக சிறையில் இருக்கும் குற்றவாளிகள் உடல்நலக்குறைவால் பலியாவது அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி ஆயுள் தண்டனை கைதியான அந்தோனி ஆனந்த் (43) என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து, மோசடி வழக்கில் 5 ஆண்டுகள் தண்டனை பெற்றிருந்த குருசாமி (59) என்பவர் கடந்த 1-ம் தேதி பலியானர்.

இந்த சம்பவங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்று சிறையிலிருந்த மாணிக்கம் (57), நாராயணசாமி (70)  ஆகியோர் கடந்த 3 மற்றும் 10-ம் தேதி உடல்நலக்குறைவால் பலியாகினர். இந்த நிலையில், இன்றும் (16.09.2017) ஒரு கைதி உயிரிழந்துள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் கைதான ராமசாமி (83) என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.  இதை தொடர்ந்து, அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  சிறையில் இருந்த ராமசாமிக்கு நேற்று மாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறை காவலர்கள் அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த 3 வார காலங்களில் சிறை கைதிகள் 5 பேர் பலியாகி இருக்கும் சம்பவம் சமூக ஆர்வலர்களிடடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சிறையில் முதலுதவி மற்றும் உணவு வழங்குவதில் முறைகேடுகள் நடைபெறுகிறதா? என்ற கேள்வி அவர்களிடையே எழுந்துள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...