ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் திட்டம் - தமிழக அரசுக்கு மலை மாவட்ட மக்கள் நன்றி

தமிழக அரசின் உத்தரவின்படி, உணவு வழங்கல் துறையின் சார்பில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப அட்டைகளிலும் ஆதார் எண் இணைக்கப்பட்டு ஸ்மார்ட் ரேஷன் கார்டு எனப்படும் மின்னணு குடும்ப அட்டை புதிதாக வழங்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 2,07,049 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அதில், உதகை வட்டத்தில் 31,996 ஸ்மார்ட் கார்டுகளும், குன்னூர் வட்டத்தில் 29,974 ஸ்மார்ட் கார்டுகளும், கோத்தகிரி வட்டத்தில் 18092 ஸ்மார்ட் கார்டுகளும், குந்தா வட்டத்தில் 11089 ஸ்மார்ட் கார்டுகளும், கூடலூர் வட்டத்தில் 22442 ஸ்மார்ட் கார்டுகளும், பந்தலூர் வட்டத்தில் 20554 ஸ்மார்ட் கார்டுகளும் ஆக மொத்தம் 1,34,147 ஸ்மார்ட் கார்டுகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் பகுதியிலுள்ள நியாயவிலை கடைகளில் எவ்வித கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம். மீதமுள்ள 72,902 குடும்ப அட்டைதாரர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டுகள் அச்சிடப்பட்டு படிப்படியாக வழங்கப்படும்.

ஸ்மார்ட் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் திருத்தம், புகைப்பட மாற்றம், முகவரி மாற்றம் ஆகியவற்றை வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் இ-சேவை மையத்திற்கு சென்று சேவை கட்டணமாக ரூ.30 செலுத்தி திருத்தம் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆறு வட்டாட்சியர் அலுவலகங்களிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் நடத்தப்பட்டு வரும் இ-சேவை மையங்களில் இந்த சேவையானது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

ஸ்மார்ட் கார்டு பெற்ற பயனாளி சுமதி கூறுகையில், நான் மடித்தொரை பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு ஸ்மார்ட் கார்டு கிடைத்து விட்டது. எனவே தற்போது நான் ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தி வருகிறேன். எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. குடும்ப அட்டைகளை ஸ்மார்ட் கார்டாக மாற்றி தந்ததால் நியாய விலைக்கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய், பாமாயில், மண்ணெண்ணெய் எவ்வளவு இருப்பில் உள்ளது என்பதையும், நியாய விலைக்கடையின் பணி நேரத்தையும் ஆகியவற்றை கைபேசிக்கு வரும் எஸ்.எம்.எஸ்ஸின் மூலம் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கிறது. எனவே இந்த திட்டத்தினை கொண்டு வந்த தமிழக அரசிற்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...