பொது இடங்கள் மற்றும் நீர் நிலைகளில் தூய்மையை கடைபிடிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கழிப்பறைகள் பயன்பாட்டினை ஊக்குவித்தல் மற்றும் சுகாதாரம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு கோயம்புத்தூர் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் தூய்மையே சேவை என்ற பிரச்சார இயக்க துவக்க விழா நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் தூய்மையே சேவை என்ற உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், தூய்மையே சேவை இயக்கம் நமது மாவட்டத்தில் 15.02.2017 முதல் 02.10.2017 வரை நடத்தப்பட்டு வருகின்றது. இம்முகாமில் அனைத்து அலுவலர்களும் முழு ஈடுபாடுடன் சுகாதாரம் மற்றும் தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வுகளில் ஈடுபடவுள்ளனர். அனைத்து நிகழ்வினையும் ஆவணப்படுத்தி அரசுக்கு தங்களது பணிகளை தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 



மேலும், இது தொடர்பாக தூய்மையே சேவை உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வின் வாயிலாக பொதுமக்கள் அனைவரும் வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார நிலையங்கள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், நீர் நிலைகள் மற்றம் இதர இடங்களில் தூய்மையை கடைபிடிப்போம் என்றும் வீடுகளில் கழிப்பறைகளின் பயன்பாட்டினையும், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை திட்டத்தினையும் பாதுகாப்பான முறையில் செயல்படுத்துவோம் என்ற உறுதிமொழியனை ஏற்போம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். 

இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர் வெங்கடபிரிய உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...