கோவையில் கட்டிடக்கலைக் குறித்த 3 நாள் கண்காட்சி செப்., 22-ம் தேதி தொடக்கம்


ஐ ஏட்ஸ் மற்றும் ஈவன்ட்ஸ் நிறுவனம் கட்டுமான தொழில் மற்றும் கட்டிடக்கலைத் தொடர்பான கண்காட்சிகளை தென்னிந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடத்தி வருகிறது. கடந்த 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை முதலில் சென்னையில் சி.ஏ.ஐ. கண்காட்சி 2017 என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியின் மூலம் தொழில்நிறுவனம், கட்டிடப் பணியாளர்கள், கட்டமைப்பினர் மற்றும் கட்டுமான உபகரணங்களை செய்வர்களுடனான தொடர்பை ஏற்படுத்தும் பாலமாக உள்ளது. 

இந்த நிலையில், "சி.ஏ.ஐ. கண்காட்சி 2017" என்ற கண்காட்சியை கோவையில் நடத்த ஐ ஏட்ஸ் மற்றும் ஈவன்ட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வரும் 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடக்கும் இக்கண்காட்சியில் கட்டிடக்கலையில் உள்ள சிறந்த படைப்புகள், புதிய தயாரிப்புகள் மற்றும் யோசனைகளை பறிமாறிக் கொள்ள உதவியாக அமையும். 

கோவையில் நடக்கும் கண்காட்சிக்கு டைட்டில் ஸ்பான்சர் தூசன் பாப்கேட் ஆகும். மேலும், டெக்னோரெயில், நிப்பான் பெயிண்ட், ஜெம் பெயிண்ட், பிரைம், கமய் எலிவேட்டர்ஸ் மற்றும் கிளாஷிக் கிச்சன் போன்றை கோ-ஸ்பான்சர்களாக உள்ளன.

கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கிய இந்தக் கண்காட்சிகள், அதிக போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களை கொண்டிருப்பதால், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆண்டில், சென்னை, கோவையை தொடர்ந்து, ஐதராபாத், கோவா போன்ற நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...