மதவெறி படுகொலைகளைக் கண்டித்து மக்கள் சிவில் உரிமை கழகம் கோவையில் கருத்தரங்கு



மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் மதவெறி படுகொலைகளுக்கு எதிரான கருத்தரங்கம் கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.

இதில் பெங்களூரில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் முற்போக்காளர்கள் படுகொலை அதிகரித்து இருப்பதாகவும், மக்களிடையே மத துவேஷத்தை மத்திய அரசு ஏற்படுத்தி வருவதாகவும் சிபிஐ எம்.எல் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் வீ.சங்கர் குற்றம்சாட்டினார்.

மேலும், கவுரி லங்கேஷ் சங்பரிவார் அமைப்புகளால் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், மதச்சார்பின்மை கொள்கை மற்றும் லிங்காயத்துகள் இந்து மதத்தில் இருந்து வெளியேற ஆதரவு தெரிவித்ததற்காக அவர் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...