கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையராக சுஜித் குமார் பதவியேற்பு


கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையராக ஐ.பி.எஸ் அதிகாரி சுஜித் குமார் பதவியேற்றுள்ளார்.

இன்று காலை மாநகர ஆணையர் அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்ட அவர் சிம்ப்ளிசிட்டிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:-



பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நான் கடந்த 2013-ம் ஆண்டு அரசு தேர்வு மூலமாக ஐ.பி.எஸ் பணியில் சேர்ந்தேன். மதுரையில் பயிற்சி முடிந்த பின்னர் சேலம் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்தேன். தற்போது பதவி உயர்வு பெற்று இந்த பொறுப்பினை ஏற்றுள்ளேன்.

கோவை மக்கள் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடப்பவர்கள் என்பதையும், போக்குவரத்து விதிமுறைகளையும் கடைபிடிப்பவர்கள் என்று அறிந்தேன்.

அதே நேரத்தில் கோவை மாநகரில் கடந்த 2016-ம் ஆண்டு மட்டும் 300 பேர் சாலை விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். நடப்பாண்டில் தற்போது வரை 200 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.

சாலை விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் தொடர்பாக ஆய்வு செய்து, அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளேன். மேலும், போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பேன்.

போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் விழிப்புணர்ச்சியை கொண்டு சேர்ப்பேன். அற்பணிப்புணர்வுடன் செயல்பட்டு போக்குவரத்து விதி மீறல்கள், விபத்துகளை தடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...