மாநகராட்சியின் பல்வேறு வரி உயர்வைக் கண்டித்து சிபிஎம் கட்சியினர் சார்பில் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை


கோவை மாநகராட்சி நிர்வாகம் சமீபத்தில் வீடுகளுக்கு வரி மறு சீராய்வு, குடிநீர் வைப்புத் தொகை உயர்வு, குப்பைக்கு வரி விதிப்பு உள்ளிட்ட புதிய வரிகளையும், வரி உயர்வினையும் அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, இன்று கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

இந்த முற்றுகைப் போராட்டத்தின் போது கோவை மாநகரத்தில் உள்ள அணைத்து வீடுகளையும் மறு அளவீடு செய்து 13.5 ஆண்டுகளுக்கான வரி விதிப்பு செய்துள்ளதை திரும்பப் பெற வேண்டும். குடிநீருக்கான வைப்பத் தொகையை ரூ.2 ஆயிரம் முதல் 7500 வரை உயத்தியுள்ளதை திரும்பப் பெற வேண்டும். மேலும், வீடுகளில் குப்பைகளுக்கு ரூ.20 முதல் 200 வரை வரிவிதிக்கப்பட்டுள்ளதை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

மேலும், தேர்வு செய்யப்பட்ட மாமன்றம் இல்லாத நிலையில் மக்கள் பிரநிதிகள் மற்றும் மக்களிடம் ஏதும் கருத்துக்களை கேட்காமல் மாநகராட்சி அதிகாரிகளே வரிகளை உயர்த்தியதற்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.



முன்னதாக மாநகராட்சி அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் சிபிஎம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கண்டன உரையாற்றினார். கோவை மாவட்ட செயலாளர் வி.ராமமூர்த்தி உள்ளிட்டு 100-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...