வங்கி உதவியாளர் பணிக்கு தமிழ் மொழி கட்டாயம் என்ற விதிமுறை தளர்வு- வாய்ப்பு பறிக்கப்படுவதாக மாணவர்கள் புகார்

தமிழகத்தில் வங்கி உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழ் மொழி கட்டாயம் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டு இருப்பதால் தமிழக மாணவர்களின் வாய்ப்பு பறிக்கப்பட்டு, பிற மாநிலத்தவர்கள் அதிகளவில் தேர்வு செய்யப்பட்டு வருவதாக வங்கி தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் வங்கி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசியதாவது:-

''இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகளவாக ஆயிரத்து 277 வங்கி உதவியாளர் பணியிடங்கள் உள்ளது. இந்நிலையில் தமிழக பொதுத்துறை வங்கி உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழ் மொழி கட்டாயம் என்ற விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது. 

பணியிடங்கள் நிரப்பப்பட்ட பின்னர் 6 மாதங்களுக்குள் மாநில மொழி தேர்வு நடத்த முடிவு செயப்பட்டுள்ளது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநில மொழி தேர்வு நடத்தப்படமால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. 

மேலும், பிராந்திய மொழி தேர்வு புறக்கணிக்கப்பட்டு இருப்பதால் தமிழக இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள். பிற மாநில இளைஞர்கள் அதிகளவில் பணியிடங்களுக்கு தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, வங்கி தேர்வுகளுக்கு தயாராகும் தமிழகத்தை சேர்ந்த 10 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதுடன், தமிழக மாணவர்கள் உரிமை பறிக்கப்பட்டு வருகிறது. தமிழக மாணவர்களை புறக்கணிக்கும் பட்சத்தில் பொதுமக்கள் வங்கிகளை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்படும். 

எனவே, தமிழகத்தில் உள்ள ஆயிரத்து 277 பணியிடங்களும் தமிழக மாணவர்களைக் கொண்டே நிரப்ப வேண்டும், இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு தபால் மூலம் மனு அளிக்க உள்ளோம்" இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...