கோவை செல்வபுரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக இரட்டைக் கொலை - 4 பேர் கைது

கோவை செல்வபுரம் பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வினோத் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில், ஆட்டோ ஓட்டுநர் ஆனந்த் மற்றும் அவரது நண்பர் செல்வம் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகக கூறப்படுகிறது. இது தொடர்பாக அண்மையில் இருவரும் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்துள்ளனர். 



இந்நிலையில், கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்தில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஆனந்த் மற்றும் செல்வம் ஆகியோரை மர்ம நபர்கள் சிலர் இன்று (22.0902017) காலை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். 

இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவரான செல்வம் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 



இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த செல்வபுரம் போலீஸார்,  சூர்யா, பாபுஜி, மோகன், சூர்யா ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

முன்விரோதம் காரணமாக மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...