கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீஸ் அக்.,4 வரை நீட்டிப்பு - உச்சநீதிமன்றம்

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீது, சி.பி.ஐ., ஊழல் வழக்கு பதிவு செய்தது. வெளிநாட்டைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு மத்திய அரசின் அன்னிய முதலீட்டு வாரியம் 2007ல் அனுமதி அளித்தது. அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த சிதம்பரத்தின் உதவியுடன், இந்த அனுமதி கிடைக்க கார்த்தி நடவடிக்கை மேற்கொண்டதாக கடந்த மே 15-ம் தேதி தனது முதல் தகவல் அறிக்கையை சி.பி.ஐ., தாக்கல் செய்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு, கார்த்தி ஆஜராகவில்லை. இதையடுத்து கார்த்திகுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து கார்த்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், லுக் அவுட் நோட்டீசுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (22.09.2017) மீண்டும் வந்தது. அப்போது, சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகு வெளிநாடுகளில் சொத்து உள்ளதால் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கக்கூடாது என வாதிட்டார். இதனையடுத்து கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீசை அக்டோபர் 4 -ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டு, விசாரணையை அன்றைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...