ரத்தநாளத்தில் தையல் போடுதல் மற்றும் கல்லீரல் அறுவை சிகிச்சை குறித்து கே.எம்.சி.ஹெச்சில் பயிலரங்கம்

கல்லீரல் நோய்களுக்கான சிகிச்சைகளை பற்றிய விசேஷ பயிற்சி வகுப்புகளை பொது மருத்துவர்களுக்கும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும் நடத்துவது என கே.எம்.சி.ஹெச். (KMCH) கல்லீரல் மையம் முடிவு செய்தது. அதன்படி, 4-வது பயிற்சி வகுப்பு மற்றும் பயிலரங்கு இன்று (23.09.2017) முதல் இரண்டு நாட்களுக்கு நடத்தப்படுகிறது.



பயிலரங்கம் குறித்து கே.எம்.சி.ஹெச். கல்லீரல் மையத்தின் தலைவரும், பயிற்சியின் இயக்குனருமான விவேகானந்தன் கூறுகையில், இரத்த நாளங்களை சேர்த்தல் மற்றும் கல்லீரலை அறுவை சிகிச்சையில் உள்ள நுணுக்கங்கள் ஆகியவை ஒவ்வொரு அறுவை சிகிச்சை நிபுணருக்கும் ஒரு பலவீனமாகவே இருந்து வருகிறது. ஆகவே, அவர்களுக்கு தங்களால் கிடைக்கக்கூடிய பல்வேறு தொழில் நுணுக்கங்களை ஆர்வமுள்ள அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பயிலரங்கமானது, ஜீரண மண்டல உறுப்புகள் அறுவை சிகிச்சை நிபுணர்களையும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை தமது துறையாக மேற்கொள்ள நினைப்பவர்களையும் மனதில் கொண்டு நடத்தப்படுகிறது. விலங்கு திசுக்களின் நுணுக்கங்கள் மூலம் இந்த பயிற்சியில் பங்கு கொள்வோருக்கு கற்பிக்கப்படும். மேலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் நிபுணர்கள் பங்கு கொள்வோருக்கு வழி காட்டுவார்கள்.

முதுகலை பட்டதாரிகளுக்கும் மற்றும் கல்லீரல் அறுவை சிகிச்சையில் ஆர்வம் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும் இந்த பயிலரங்கம் மிகவும் ஏற்றது. பயிற்சியை முடித்தவர்களுக்கு எத்திகான் (Ethicon) நிறுவனத்தின் சான்று வழங்கப்படுகிறது. 

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையின் துணை தலைவர் பழனிசுவாமி பேசுகையில், கே.எம்.சி.ஹெச். கல்லீரல் மையத்தின் குழுவில் உள்ள விவேகானந்தன், ராஜீவ் சின்ஹா மற்றும் சோரப் கபூர் ஆகியோரை நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த இளம் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு இப்படி ஒருமேடை அமைத்து கொடுத்ததற்கு பாராட்டுகிறேன். இது போன்ற பயிலரங்குகளையும், மருத்துவ கூட்டங்களையும் நடத்துவதன் மூலம் வளர்ந்துவரும் நிபுணர்களுக்கு பல நுட்பமான சிகிச்சை முறைகளை கற்றுத்தர கே.எம்.சி.ஹெச். கல்லீரல் மையம் முனைப்பாக செயல்படுவது தனக்கு பெருமிதமாக உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...