ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஆணையம் ஒன்றை அமைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் இந்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

ஜெயலிலதா மரணம் பற்றி தினந்தோறும் பல்வேறு புதுப்புது அதிர்ச்சி தகவல் வெளியாகி வரும் நிலையில், விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மீதான நடவடிக்கை என்ன, விசாரணை ஆணையம் யார் தலைமையில் அமைக்கப்படும் என்ற கேள்விக் கணைகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது சரமாரியாக பாய்ந்தது.  இந்த நிலையில், தற்போது  ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் இந்த விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக கடந்த டிசம்பர் 5-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உள்ளிட்ட பலர் சந்தேகம் எழுப்பினர். இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைப்பிற்கு முன் ஓ.பி.எஸ். தரப்பு கோரிக்கையில் ஒன்றான ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...