கோவை மாநகராட்சியின் மக்கள் விரோதப்போக்கினைக் கண்டித்து அனைத்து கட்சி சார்பில் முற்றுகை போராட்டம்

கோவை மாநகராட்சியின் புதியவரி விதிப்பு, குடிநீர் இணைப்பு வைப்புத் தொகை, குப்பைகளுக்கு வரி உள்ளிட்ட மக்கள் விரோதப் போக்கினை கடைபிடித்து வரும் கோவை மாநகராட்சியினைக் கண்டித்து குறிச்சி, குனியமுத்தூர், ஆர்.எஸ்.புரம் பகுதிக் கழகங்களுக்கு உட்பட்ட அனைத்துக் கட்சிகளின் சார்பில் இன்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

டவுன்ஹால் மாநகராட்சி அலுவலகத்திற்கு முன்பு நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு திமுக மாநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., மாநகர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் மு.முத்துசாமி மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.



இந்த முற்றுகைப் போராட்டத்தில் கோவை மாநகர மக்களைப் பெரிதும் பாதிக்கின்ற மாநகராட்சியின் புதியவரி விதிப்பு, குடிநீர் இணைப்பு வைப்புத்தொகை, குப்பைவரி உள்ளிட்ட மாநகராட்சியின் மக்கள்விரோதப் போக்கினைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அந்த பகுதிக்கழகங்களுக்கு உட்பட்ட காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட கட்சிகள் மற்றும் மாவட்டக்கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிக்கழக செயலாளர்கள், குறிச்சி, குனியமுத்தூர், ஆர்.எஸ்.புரம் பகுதிக்கழகங்களுக்கு உட்பட்ட பகுதிக்கழக செயலாளர்கள், வட்டக்கழக செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



இதனைத்தொடர்ந்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.



Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...