கோவை - மங்களூரூவுக்கு புதிய விமான சேவை - ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவிப்பு


கோவையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்களில் ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் கோவையில் இருந்து மேலும் ஒரு புதிய விமான சேவையை அறிவித்திருந்தது. 

அதாவது, கோவையில் இருந்து பெங்களூரூவுக்கும், பெங்களூரூவில் இருந்து கோவைக்கும் விமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் அக்டோபர் 3-ம் தேதி முதல் இந்த விமானப் போக்குவரத்து சேவை தொடங்குகிறது.

அதோடு, ஐதராபாத், கொல்கத்தா, விஜயவவாடா, மும்பை, புனே, மங்களூர், டெல்லி போன்ற நகரங்களின் இணைப்பு விமானங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

செவ்வாய்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களும் இந்த விமான சேவை இருக்கும் என ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. 

விமான பயண விபரம்:  கோவையில் புறப்படும் நேரம் மாலை 04.05 - பெங்களூரூவுக்கு சென்றடையும் நேரம் மாலை 05.05. இதேபோல, பெங்களூரூவிலிருந்து புறப்படும் நேரம் மாலை 02.50 - கோவைக்கு சென்றடையும் நேரம்  மாலை 03.45. 

புதிய சேவையின் தொடக்க சலுகை விலையாக (ஒரு முறை செல்வதற்கு மட்டும்) ரூ.1949 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, கோவை மற்றும் மங்களூரூ இடையே அக்டோபர் 4-ம் தேதி முதல் புதிய விமான சேவையையும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. 

செவ்வாய்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களும் இந்த விமான சேவை இருக்கிறது. 

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...