தமிழக ஆளும் அரசு மதவிரோதப் போக்கு மாறவேண்டும் - தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

மத்திய மதவாத பாஜக அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வரும் தமிழக அதிமுக அரசினைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவ்வாமைப்பின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சமீப காலமாக தமிழக அரசு மத்திய பாஜகவின் பினாமி அரசாகவே செயல்பட்டு வருகிறது. இதை மெய்ப்பிக்கும் விதமாக, மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை விவகாரத்தில் மௌனம் காத்தது, நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசின் அநீதிக்கு சாமரம் வீசியது என்று பட்டியல் நீள்கிறது. அந்த வரிசையில், அனைத்துப் பள்ளிகளிலும் யோகா கட்டாயமாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் அறிவித்துள்ளது.

தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பு பாஜகவின் பினாமி அரசாக தமிழக அரசு செயல்படுவதை மீண்டும் உறுதிபடுத்தும் செயலாகும். முஸ்லிம்கள் உடற்பயிற்சிக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் அதில் யோகா பயிற்சியில் ஓம் என்ற வார்த்தையை உச்சரிப்பதும், சூரியனை வணங்குவது என்றும் ஒரு குறிப்பிட்ட மதத்தின் வணக்க வழிபாட்டு நிகழ்வுகள் அடங்கியுள்ளன. இப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தின் அனுஷ்ட்டானங்களை அனைவரும் பயிலும் பள்ளிகளில் கலப்பது என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல.

யோகாவில் சூரியனை வழிபடுவதும் ஒரு பயிற்சியாக உள்ளது. முஸ்லிம்கள் படைத்த இறைவனைத்தவிர வேறு யாரையும் வணங்கமாட்டார்கள். இந்த அடிப்படைக்கு மாற்றமாக உள்ள யோகா என்ற பெயரில் சூரிய வழிபாட்டை முஸ்லிம்கள் ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டார்கள்.

இந்த இந்திய திருநாட்டில் அவரவர் தான் விரும்பும் சித்தாந்தத்தை பின்பற்ற முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படைக்கு எதிராக அனைவரும் யோகா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கூறியிருப்பது இந்திய அரசியலமைப்பு சாசனத்தையே தரைமட்டமாக்கும் தேச விரோத செயல் ஆகும்.

எனவே, இந்த அறிவிப்பை தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...