கோவையில் செயல்படும் மத்திய அரசு அச்சகத்தை மூடும் முயற்சியில் தமிழகம் வஞ்சிக்கப்பட உள்ளது - கு.இராமகிருட்டிணன்

கோவையில் செயல்படும் மத்திய அரசின் அச்சகத்தை மூடுவதற்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சியால் தமிழகம்  வஞ்சிக்கப்பட உள்ளதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 



கடந்த 1964-ம் ஆண்டு காமராசர் ஆட்சியின் போது மத்திய அரசின் அச்சகம் போராடி கோவை மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சியில் நிறுவப்பட்டது. இதில் 70 பேர் தற்போது பணி செய்து வருகின்றனர். இந்த தொழிலை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாகவும், பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் மறைமுகமாகவும் வாழ்ந்து வருகின்றனர்.



இந்தியா முழுவதிலும் இது போல் 17 அச்சகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் தென்னிந்தியாவில் உள்ள 6 அச்சகங்களை முழுவதுமாக மூடிவிட்டு அதனை வட மாநிலங்களில் உள்ள அச்சகங்களோடு இணைத்து அவற்றை நவீனப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

அதற்காக, தமிழகம், கேரளாவில் உள்ள அச்சகங்க நிலங்களை விற்கவும், கர்நாடகத்தில் உள்ள அச்சக நிலத்தை அம்மாநில அரசிடம் ஒப்படைப்பதாகவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.



தென்னிந்தியாவித்கு ஒரு அச்சகத்தை கூட விட்டு வைக்காமல், வட இந்திய அச்சகங்களை நவீனப்படுத்த நினைப்பதிலேயே தமிழகம் வஞ்சிக்கப்படுவது உண்மை என புலப்படுகிறது. உடனடியாக இந்த முடிவு கைவிடப்பட வேண்டும். இது தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களிடம் பேசி போராட்டம் நடத்த உள்ளோம். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...