வளமான குழந்தைகளை உருவாக்கி நலமான சமுதாயத்தை படைக்கும் முயற்சி

கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கிய அறம் அறக்கட்டளை தொண்டு நிறுவனம், சாதாரண மனிதனின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. குழந்தைகள்தான் சமுதாயத்தை மாற்றியமைக்கக் கூடியவர்கள், எனவே, வளமான குழந்தைகளே நலமான சமூகமாகும்.

குழந்தைகளின் வாழ்க்கையில் கல்வியே மூலதனமாகும். ஒவ்வொரு குழந்தைகளிடம் இருக்கும் திறமைகளை, ஏற்ற சுற்றுச்சூழல், சரியாக வழிநடத்துதல், சுதந்திரமாக செயல்பட விடுதல் ஆகியவற்றின் மூலம் வெளிக் கொண்டுவருவதால், அவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி கிடைக்கிறது. இந்த வெற்றிகளின் காரணமாக இறுதியில் நல்ல குடிமகன் உருவாகின்றான். இதன் மூலம் புதிய சமுதாயம் பிறக்கிறது. 

கோவையில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் கடந்த ஆறு மாதங்களாக நடத்தப்பட்ட ஆய்வில், பல்வேறு வலுவான உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, கல்வியாளர்கள், நரம்பியல் உளவியலாளர்கள், ஆலோசகர்கள், வழிகாட்டிகள், ஊக்குவிப்பாளர்கள், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், டி.ஆர்.ஓ., பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆலோசனை நடத்தினர். 

இதைத் தொடர்ந்து, ”மகிழ்ச்சியான குழந்தைகள் என்ற திட்டம்”  நிர்வாக இயக்குநர் லதா சுந்தரம் தலைமையில் உருவாக்கப்பட்டது. 

தொடங்கப்பட்ட ஆண்டு : 2012, அக்டோபர்

இதுவரை பயனடைந்தவர்கள் : 67,650 மாணவர்கள்

முடிவுகள் : பல குழந்தைகளின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதால் மகிழ்ச்சி உருவாகிறது. பள்ளிகளில் இனிமையான சுற்றுச்சூழல் மற்றும் குழந்தைகளில் நடவடிக்கைளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 6,500 குழந்தைகளின் சுயமதிப்பீட்டை அளவிடும் சிறுபுத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.  ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்டவர்களின் நல்ல கருத்துகள் கிடைத்துள்ளது. 



இந்த ஆண்டு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 11,500 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலைக் கல்லூரியில் சுமார் 200-க்கும் பயிற்சியாளர்கள், பெண்களின் அதிகாரம் குறித்து நிகழ்ச்சி இன்று (27.09.2017) நடந்தது. இதில், குழந்தைகளின் மனநிலை, மாணவர்களின் சுயமதிப்பு, பயிற்சியாளர்கள் பின்பற்ற வேண்டிய, பின்பற்றக் கூடாத நடவடிக்கைகள் உள்பட 20 விதமான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.  பின்னர், இந்த நிகழ்ச்சியில் சுய மதிப்பீட்டு புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.  



Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...