இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் நெசவாளர்களுக்கு அதிகளவு கடனுதவி வழங்கப்படுகிறது - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்

கோவை மாவட்டம் சாய்பாபா காலனியில் இன்று (27.09.2017) தமிழ்நாடு பஞ்சாலைகழக புதுபிக்கப்பட்ட அலுவலக கட்டிடத்திறப்பு விழா, மற்றும் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த நெசவாளர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் கடனுதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. 

மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன்  தலைமையில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநர் முனியநாதன் முன்னிலையில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன்  புதுபிக்கப்பட்ட அலுவலக கட்டிடத்தினை திறந்து வைத்து ரூ.2.60 கோடி மதிப்பிலான கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  



அப்போது பேசிய அமைச்சர் ஓ.எஸ். மணியன், தமிழ்நாடு அரசு நெசவாளர்களின் நலன் காக்கின்ற வகையில் சீரிய திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையிலே தமிழகத்தில் 10 ஆயிரம் நெசவாளர்களுக்கான பிரத்யேக பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளது. விசைத்தறி நெசவாளர்களுக்கு 500 யூனிட்லிருந்து 750 யூனிட் ஆகவும், கைத்தறி நெசவாளர்களுக்கு 100 யூனிட்டிலிருந்து 200 யூனிட்டாகவும் உயர்த்தி இலவச மினசாரம் வழங்கப்பட்டு வருகின்றது. 

இன்றைய தினம் தமிழ்நாடு பஞ்சாலை கழகத்தின் அலுவலகக்கட்டிடம் ரூ.21 லட்சத்தில் கோவை மாவட்டம் சாய்பாபா காலனியில் 2,500 சதுரடி பரப்பளவில் புதுபிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு பஞ்சாலைகழகத்தின் சொந்தமாக 36 விசைத்தறிகளை கொண்ட தறிக்கூடமும், 10 நாடா இல்லா தறிகளைக் கொண்ட ஒரு தறிக்கூடமும், விருதுநகர் மாவட்டம் அறுப்புக்கோட்டையில் 96 தறிகளைக் கொண்ட ஒரு விசைத்தறிக் கூடமும் மற்றும் ஈரோடு மாவட்டம் சிவகிரியில் 96 கைத்தறிகளைக் கொண்ட விசைத்தறிக்கூடமும் செயல்பட்டு வருகின்றது.



 இந்த விசைத்தறிக்கூடங்களில் 150 தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இக்கழகத்தின் மூலம் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு தேவையான சீருடை துணிகளையும், அரசின் விலையில்லா வேட்டி, சேலை மற்றும் விலையில்லா சீருடைத் துணிகளை உற்பத்தி செய்தும் மற்றும் கைத்தறி, விசைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கொள்முதல் செய்து அரசு விநியோகிக்கப்பட்டு வருகின்றது. 

மேலும், தமிழகத்திலுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர்த்திட வங்கிகள் மூலம் கடனுதவி அளிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 500 நெசவாளர்களுக்கு ரூ.2.50 கோடி கடனுதவிகளும், நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 60 வயது பூர்த்தியடைந்த 5 உறுப்பினர்களுக்கு ரூ.3.54 லட்சம் மதிப்பிலான சேமிப்புத் தொகை, மகாத்மா காந்தி புங்கர் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் உயிரிழந்த உறுப்பினர்களின் வாரிசுதாரர்களுக்கு ஆயுள் காப்பீட்டுத் தொகை மற்றும் கோ-ஆப்டெக்ஸ் வழங்கும் கருணை தொகையாக 8 பயனாளிகளுக்கு ரூ.6.8 லட்சம் மதிப்பிலான உதவித் தொகையும் என மொத்தம் ரூ.2.60 கோடி மதிப்பிலான நெசவளார்களுக்கான உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றது.  இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு, கோ-ஆப்டெக்ஸ் வாரியத்தலைவர் கே.வீ.மனோகரன், தமிழ்நாடு பஞ்சாலைகழக மேலாண் இயக்குநர் நடராஜன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை இணை இயக்குநர்  நாகராஜ், உதவி இயக்குநர் சாமிநாதன், பிச்சைமுத்து, தங்கராஜன், பாரத ஸ்டேட் வங்கி மண்டல துணை மேலாளர் ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...