தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்



கோவை மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நேற்று (27.09.2017) மாலை 4.00 மணிக்கு வடகோவை கிராஸ் கட் சாலையில் உள்ள கோவை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட அவைத் தலைவர் வெ. நா. பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ சிறப்புரையாற்றினார். பின்னர், செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



அதில், வருகின்ற (01.10.2017) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி அளவில் பீளமேடு விமான நிலையத்திற்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி செயல் தலைவர் மு.க ஸ்டாலின் வருகை தர உள்ளதை மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாபெரும் வரவேற்பினை அளிப்பதற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் அனைவரும் பெரும் திரளாக பங்கேற்று வரவேற்பு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், திண்டுக்கல்லில் செப்டம்பர் 16 ம் தேதி அன்று நடைபெற்ற முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் செயல்தலைவர் மு.க ஸ்டாலின் அறிவிப்பிற்கிணங்க, கோவை மாநகர் தெற்கு மாவட்ட கழகம் கழக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று லட்சக்கணக்கிலே கழகத்திற்கு உறுப்பினர்களை சேர்த்து கழகம் வலுப்பெறுவதற்கு முனைப்புடன் செயல்படவும் முடிவு செய்யப்பட்டது.

கோவை மாநகராட்சியில் மக்களை பாதிக்கின்ற வகையில் அறிவித்திருக்கின்ற புதிய வரி விதிப்பு , குப்பைகளுக்கு வரி , குடிநீர் இணைப்புக்கு வைப்புத் தொகை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டங்கள், அனைத்திலும் சிறப்பாக பங்கேற்ற மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிக் கழக செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர் அனைவருக்கும் திமுக சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



இக்கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள் சிங்கை ஆர்.ரவிச்சந்திரன், சாந்தி , தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி. சுப்ரமணியம் , பொதுக்குழு உறுப்பினர் ஜஹாங்கீர், கதிர்வேல்சாமி, உமா மகேஸ்வரி, பகுதிக் கழக செயலாளர்கள் கே.எம். சுந்தரம், சா.மாணிக்கம், எஸ்.எம்.சாமி, மாவட்ட அமைப்பாளர்கள் இளஞ்சேரன், தளபதி இளங்கோ, பையாக்கவுண்டர், முருகேசன், மாலதி நாகராஜன், மற்றும் வட்டக் கழகச் செயலாளர்கள், பகுதிக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக முன்னணியினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...