சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் முதலமைச்சர் கலந்து கொள்ளாதது ஏமாற்றம் - சிவாஜி குடும்பத்தினர் அதிருப்தி அறிக்கை

சென்னை அடையாறில் ரூ.2 கோடியே 80 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை அவரது பிறந்த நாளான அக்டோபர் 1-ம் தேதி அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைக்கிறார்.

இவ்விழா குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மணிமண்டப திறப்பு விழா அக்டோபர் 1-ம் தேதி காலை 10.30 மணி அளவில் நடைபெறும். விழாவுக்கு மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமை வகிக்கிறார். மணிமண்டபத்தை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்துவைத்து, சிவாஜி கணேசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்" என்று தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு சிவாஜி குடும்பத்தினர் அதிருப்தி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்,  கூறியிருப்பதாவது:

மாண்புமிகு அமைச்சர் அவர்களே, சிவாஜி கணேசனுக்கு (எங்கள் தந்தைக்கு) மணி மண்டபம் அமைப்பது என்பது முன்னாள் முதலமைச்சரின் ஜெயலலிதாவின் கனவு திட்டமாக இருந்தது. இப்போது, அவர் உயிருடன் இருந்திருந்தால் அவரே முன் நின்று மணிமண்டபத்தை திறந்து வைத்திருப்பார்.

தந்தையின் மணி மண்டபத்தை அரசு திறந்துவைப்பதில் பெரு மகிழ்ச்சி. ஆனால், அந்த திறப்புவிழாவில் முதலமைச்சரோ அல்லது துணை முதலமைச்சரோ கலந்து கொள்ளாதது மகிழ்ச்சிக்கு இணையாகவே ஏமாற்றத்தைத் தருகிறது.

தனது திரைப்படங்கள் வாயிலாக தமிழ் கலாச்சாரத்துக்கும் தமிழ் மொழிக்கும் தொண்டாற்றிய ஒரு பெரும் நடிகரின் மணி மண்டப திறப்பு விழாவில் அரசு சார்பில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் கலந்து கொள்ளாதது தனது தந்தையை அவமரியாதை செய்வதாகவே நாங்கள் கருதுகிறோம்.

எனவே, திறப்பு விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர்,அதிகாரிகள் கலந்து கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். எங்கள் குடும்பத்தினரும் சிவாஜி கணேசனின் ரசிகர்களும் உங்கள் தரப்பிலிருந்து நல்லதொரு பதிலுக்காக காத்திருக்கிறோம்.

இவ்வாறு சிவாஜி குடும்பத்தினர் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...