சூலூர் அருகே மதுக்கடையை மூட எதிர்ப்பு தெரிவித்து மதுபிரியர்கள் ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், சூலூர் அருகே செங்கத்துறை பகுதியில் டாஸ்மாக் கடையினை மூட எதிர்ப்பு தெரிவித்தும், தொடர்ந்து டாஸ்மாக் கடையினை நடத்த வலியுறுத்தியும் மதுபிரியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்டம் சூலூர் அருகே செங்கத்துறை பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி, அதனை அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டாஸ்மாக் கடைக்கு ஆதரவாக அப்பகுதியைச் சேர்ந்த மது பிரியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், டாஸ்மாக் கடை மூடப்பட்டால் கூலி தொழிலாளர்கள் அதிக விலை கொடுத்து கள்ள சந்தையில் மது வாங்கி குடிக்க நேரிடும் எனவும், அதேசமயம் டாஸ்மாக் கடையைத் தேடி பல கிலோமீட்டர் சுற்றி வேறு பகுதிக்கு சென்றால் விபத்துகள் நேரிடும் எனவும் மதுபிரியர்கள் தெரிவித்தனர்.

மேலும், செங்கத்துறை பகுதியில் டாஸ்மாக் கடையினை மூட எதிர்ப்பு தெரிவித்த மதுபிரியர்கள், தொடர்ந்து டாஸ்மாக் கடையினை நடத்த வலியுறுத்தினர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...