மும்பை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 22 பேர் பலி

மும்பை எல்பின்ஸ்டன் ரயில் நிலைய மேம்பாலத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாகவே காணப்படும். குறுகிய நடைமேடை மேம்பாலத்தில் பயணிகள் சென்று கொண்டிருக்கும் போது, மின்சாரம் கசிந்ததாக வதந்தி பரவியது. இதனால், அங்கிருந்து மக்கள் ஓட முயன்றனர்.

நடைமேடை மேம்பாலத்தில் கூட்டம் அதிகரித்திருந்ததால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி மூச்சு திணறி 3 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயம் அடைந்து உள்ளனர் எனவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகியது.

காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். விபத்து நேரிட்ட பகுதிக்கு ஆம்புலன்ஸ்கள் விரைந்து சென்று உதவியில் ஈடுபட்டது. தீயணைப்பு குழுவும் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மீட்பு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நேரத்தில் இந்த விபத்து நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...