மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு (பிங்க்) மாதம்

உலகம் முழுவதும் அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு (பிங்க்) மாதமாக அனுசரிக்கப்படுகிறது. பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் மிகஅதிகம் பேரை பாதிக்கும் மார்பகப் புற்றுநோய்யானது ஆரம்பநிலையில் கண்டறியப்பட்டால் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளதால், இப்புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது.

கடந்த 2003ல் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ இராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் பற்பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. இந்நிகழ்வின்போது, அக்டோபர் மாதம் முழுவதும் இலவச மார்பக பரிசோதனை முகாம், இலவச மேமோகிராம் (X-கதிர்பட சோதனை), விழிப்புணர்வு கையேடுகள் வழங்குதல், குறும்படம் வெளியிடுதல் முதலியவை நடைபெறும்.

அதன்படி, இந்த வருடம் ஸ்ரீ இராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மையத்தில் அக்டோபர் மாதம் முழுவதும் இலவச மார்பக பரிசோதனை முகாம், இலவச மேமோகிராம் பரிசோதனை நடைபெற உள்ளது.



செப்டம்பர் 30 ம் தேதியன்று மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெருமுயற்சியில் எல்லோரும் சுலபமாக கையாளும் வகையில், புரிந்து கொள்ளும் வகையிலும் செவிமடல்கள் வழியாக விபரங்களைக் கேட்டறிவதற்கு "Blue Tooth Breast Cancer" என்ற இணையத்தள வழி செயலியினை பி.குகன் அறிமுகப்படுத்தினார்.



முன்னதாக, எஸ் என் ஆர் சான்ஸ் டிரஸ்ட் இணை நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ. இலக்ஷ்மிநாராயணசாமி தலைமைpயல் நடைபெற்ற இந்நிகழ்வில் காவல்துறை உதவி ஆணையர் எஸ்.லட்சுமி முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு இணையதள வழி செயலியை வெளியிட்டார்.



Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...