அரசு எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் : கேரள மருத்துவமனைகளால் புறக்கணிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கண்ணீர்

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலாயுதம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு சக தொழிலாளர்களுடன் ஏற்பட்ட தகராறில் ராஜேந்திரனின் கை மற்றும் கால்களில் வெட்டுப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, வெட்டுக்காயமடைந்த ராஜேந்திரனுக்கு கேரளாவில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகத்தினர் மறுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. 

தொடர்ந்து, வேலாயுதம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிகிச்சை அளிக்க தாமதமானதால் காலில் உள்ள செல்கள் இறந்துவிட்டதாகவும், அதனால் காலை அகற்ற வேண்டும் என்றும் கூறினர்.

இதனிடையே, இன்று ராஜேந்திரனுக்கு கேரள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், சிகிச்சை அளிக்க மறுத்த கேரள அரசு மருத்துவமனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க பேட்டி அளித்தனர்.

இது குறித்து ராஜேந்திரனின் மகன் ராகவன் சிம்ப்ளிசிட்டிக்கு அளித்த பேட்டியில், 'என் தந்தைக்கு கேரளாவில் சிகிச்சை அளிக்க மறுத்தனர். இதனை தொடர்ந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். சிகிச்சை அளிக்க தாமதமானதால் என் தந்தையின் காலை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர்.

எங்கள் மொத்த குடும்பமும் தந்தையின் வருமானத்தை நம்பியே உள்ளது. எனது தந்தையின் கால் பறிபோனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு எங்கள் படிப்பும் பாதிக்கப்படும்.

எனவே, தமிழக அரசு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்ட கேரள மருத்துவமனை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...