சீரமைப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் சின்னவேடப்பட்டி ஏரி- விரைந்து நடவடிக்கை எடுக்க தன்னார்வலர்கள் கோரிக்கை

தமிழகம் முழுவதும் கடந்த மாதம் பரவலாக மழை பெய்தது. இதில், கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பின. குறிப்பாக, நொய்யல் உள்ளிட்ட அழியும் தருவாயில் இருந்த ஆறுகளில் கூட வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஆனால், கோவை வடக்கு பகுதியில் உள்ள சின்னவேடப்பட்டி ஏரிக்கு தண்ணீர் சரிவர வரவில்லை. கோவை மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதார திட்டமாக உருவாக்கப்பட்டது சின்னவேடப்பட்டி ஏரி. கோவை நகரின் வடக்கு பகுதி செழிக்க பல விவசாய மக்கள் தங்களது நிலங்களை இத்திட்டத்திற்காக வழங்கியுள்ளனர்.

சங்கனூர் ஓடையில் வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் மிகப்பெரிய பேரிழப்பை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சின்னவேடப்பட்டி ஏரி தற்போது பயனற்ற நிலையில் காணப்படுகிறது. இதற்குக் காரணம், சங்கனூர் ஓடையில் உள்ள கணுவாய் பகுதியில் இருந்து ஆரம்பிக்கும் சின்னவேடப்பட்டி ஏரியின் ராஜாவாய்க்கால் பராமரிப்பின்றி உள்ளதே ஆகும்.



கணுவாய் பகுதியில் உள்ள சின்னவேடப்பட்டி ஏரியின் ராஜ வாய்க்கால் ஷட்டர்கள் சரிவர பராமரிப்பின்றி உள்ளது. இதனால் சங்கனூர் ஓடையில் வெள்ளம் வரும்போது மிக குறைந்த அளவே ஷட்டர்கள் வழியாக சின்னவேடப்பட்டி ஏரிக்கு வருகிறது.



சரவணம்பட்டி பகுதியைப் பொறுத்தவரை ஏராளமான குடியிருப்புகளும், கல்லூரிகளும் அமைந்துள்ளன. கோவை மாநகரின் மிகப்பெரிய தொழிற்சாலை நிறுவனங்களும், தொழில்நுட்ப ஐ.டி கம்பெனிகள் இந்தப்பகுதியில்தான் உள்ளது. இதன்காரணமாக, சரவணம்பட்டிக்கு உட்பட்ட பகுதிகளில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவேண்டிய கட்டாயம் மாநகராட்சி உள்ளது.



தற்போது, சின்னவேடப்பட்டி ஏரி புனரமைப்பு செயல்பாட்டில் சின்னவேடப்பட்டி ஏரி பாசன சங்கத் தலைவர் களிசாமி, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் கௌசிகா நதி மேம்பாட்டு சங்கத்தின் செல்வராஜ் உள்ளிட்டோர் இணைந்து செயல்பட முடிவு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. 



இதன் முதற்கட்டமாக பொதுப்பணித்துறை வசம் கோரிக்கை விடுத்ததன் விளைவாக தற்போது சின்னவேடப்பட்டி ஏரி மற்றும் சங்கனூர் ஓடையில் கணுவாய் தடுப்பணை, ராஜ வாய்க்காலை சீரமைக்க சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திட்ட வரைவு ஏற்படுத்தி உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



மேலும், சின்னவேடப்பட்டி ஏரியை கோவையின் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் சேர்க்க சின்னவேடப்பட்டி ஏரி மீட்புக் குழுவின் சார்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட உள்ளது. தொடர்ந்து, ராஜ வாய்க்கால்களில் தண்ணீர் வரும்போது தன்னார்வலர்கள் உதவியுடன் கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...