இந்திய உணவுக் கிடங்கால் அதிகரிக்கும் செல்லுப் பூச்சிகள் - நடவடிக்கை கோரி திமுக சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்

ஆவாரம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் இந்திய உணவுக் கிடங்கினால் செல்லுப் பூச்சிகள் அதிகளவில் உற்பத்தியாகி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

கோவை மாவட்டம், ஆவாரம்பாளையம் பகுதியில் இந்திய உணவுக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. 1982- ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த உணவுக் கிடங்கானாது 82 ஏக்கர் பரப்பளவில், சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் டன் தானியங்களை இருப்பு வைக்கும் அளவிற்கு கொள்ளளவு கொண்டது.

இதனிடையே, இந்த உணவுக் கிடங்கில் சமீபகாலமாக முறையான பராமரிப்பின்றி செல்லுப் பூச்சிகள் அதிகரித்து வருகின்றது. இந்தப் பூச்சிகள் அருகாமையில் உள்ள ஸ்ரீராம்நகர், பீளமேடு, ஆவாரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் பரவி வருகிறது.

எனவே, இந்திய உணவுக் கிடங்கு மேலாளரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தவும், உடனடியாக அதனை கட்டுக்குள் கொண்டு வரவும் வலியுறுத்தியுள்ளேன்.

இவ்வாறு திமுக சட்டமன்ற உறுப்பினர் ந.கார்த்திக் தெரிவித்தார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...