கோவை, தலைமை தபால் அலுவலகத்தில் உள்ள மரத்தில் கடந்த மூன்று நாள்களாக சிக்கிக் கொண்டிருந்த பூனையை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.


கோவை தலைமை தபால் அலுவலகத்தில் உள்ள வேப்ப மரத்தில், பூனை ஒன்று கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு ஏறியது. ஆனால், மரம் உயரமாக இருப்பதால், பூனையால் கீழே இறங்க முடியவில்லை. தபால் ஊழியர்கள் சிலரும் பூனையை மீட்க முயன்றனர். ஆனால், அவர்களால் பூனையை மீட்க முடியவில்லை.

இதையடுத்து, முன்னாள் தபால் ஊழியர் ஹரிஹரன் என்பவர் நமக்கு கொடுத்த தகவலின் பேரில் நாம் தலைமை தபால் அலுவலகத்துக்கு சென்றோம். அங்கு மரத்தில் இருந்து இறங்க முடியாமல் பூனை தவித்து வந்தது.  இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தோம். இதைத்தொடர்ந்து, கோவை மாவட்ட தலைமை தீயணைப்பு துறை அலுவலர் பிரதீப் குமாரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், ஸ்டேஷன் ஆஃபிஸர் அண்ணாதுரை தலைமையில் சிவகுமார், தேவராஜ், ஜெயச்சந்திரன், சிவகுமார், தங்கபாண்டி, ஶ்ரீதரன், விபின் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஏணி, குச்சி உள்ளிட்ட உபகரணங்களுடன் அவர்கள் பூனையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

ஆனால், பூனை சிக்கவில்லை. மரக்கிளையில் அங்கும், இங்கும் பூனை தாவியது. அரை மணி நேர முயற்சிக்குப் பிறகு பூனை மீட்கப்பட்டது. பூனையை பிடிப்பதற்காக, கீழே பெட்சிட்டை விரித்து தீயணைப்பு துறையினர் தயாராக இருந்தனர். ஆனால், பூனை பெட்சிட்டில்வ விழுகாமல், கீழே விழுந்து நொடிப்பொழுதில் அந்த இடத்தை விட்டு ஓடியது. பூனையை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...