கணபதி அருகே நிதிநிறுவனம் நடத்தி பல கோடி மோசடி- நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், கணபதி அருகே லட்சுமி புரம் பகுதியில் சூரிய கணபதி சிட்பன்ஸ் என்னும் தனியார் நிதி நிறுவனத்தினர் பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாய் பெற்று ஏமாற்றிவிட்டதாகவும், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் நிதிநிறுவன ஊழியர்கள் கூறியதாவது:-

கணபதி அருகே சுரிய கணபதி சிட்பன்ஸ் என்னும் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜீத்து ஆகியோர் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் இருந்து ஆறு ஆயிரம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வைப்புத் தொகையாக பெற்றனர்.



ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நிதிநிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காமல் இழுத்தடித்தனர். வைப்புத் தொகை குறித்து கேள்வியெழுப்பும் மக்களுக்கு மட்டும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்த தொகையினை வழங்கினர். மேலும், இதுகுறித்து கேள்வியெழுப்பினாலோ அல்லது வழக்கு பதிந்தாலோ பணம் எதுவும் தராமல் சென்றுவிடுவோம் என மிரட்டி வருகின்றனர்.

கேரளா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட நிதிநிறுவன தலைவர் மற்றும் ஜீத்து திருசூரில் சுப்ரீம் பைனான்ஸ், குரிஸ் என்னும் நிதிநிறுவனங்களை நடத்தி வருகின்றனர். அதிகப்படியான பணம் இருந்தும் பொதுமக்களின் பணத்தினை திருப்பி வழங்காமல் ஏமாற்றி வருகின்றனர்.

எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் ஊழியர்களுக்கு சேரவேண்டிய தொகையினை பெற்றுத் தர வேண்டும் என அவர்கள் கூறினர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...