ராஜா கழுகுகளின் வரவால் அழகு கூடும் பவானிசாகர் அணையின் நீர்தேக்கம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை கிராமம் பகுதியில் பவானிசாகர் அணையின் நீர்தேக்கம் உள்ளது. இதனையொட்டி, கோவை வனப்பகுதிக்குட்பட்ட சிறுமுகை கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு பறவைகள் மற்றும் வனவிலங்குகள் வந்து செல்கின்றன. 

தற்போது, பவானிசாகர் அணையின் நீர்தேக்கத்தின் ஜுரோ பாயிண்ட் பகுதியில் சிவப்பு நிற தலையை கொண்ட ராஜா கழுகுகள் வருகை தந்துள்ளன. அதனை, பொதுப்பணித்துறையின் உதவி நிர்வாக பொறியாளர் நிதியன் புகைப்படம் எடுத்துள்ளார். அதில், ராஜா கழுகுகள், இறந்த மானின் உடலை  தின்று கொண்டிருந்தது பதிவாகியுள்ளது. 

கழுகுகளின் வருகையால் வளமான வனப்பகுதியை குறிக்கும் என்ற நிலையில், சுற்றுவட்டாரப்பகுதியான சத்தியமங்கலத்தின் மோயர் பள்ளத்தாக்கு, புலிகள் சரணாலயம் மற்றும் பிற பகுதிகளிலும் இவைகள் பெரிதும் காணப்படுகின்றன. மனிதர்களின் ஆதிக்கம் இல்லாத இந்த பகுதியில், பல்வேறு இடங்களில் இருந்து வரும் விலங்குகள் மற்றும் பறவைகளின் வரத்து அதிகரிக்கும் எனத் தெரிகிறது. 

பவானிசாகர் அணையின் நீர்தேக்கத்தில் தண்ணீரின் அளவால் இயற்கை எழிலகு பொழிந்து காணப்படும் வேளையில், வன விலங்குகளின் வருகையும் அதிகரிக்கிறது. ஏற்கனவே, யானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளும், மாமிச உண்ணிகளான புலி, சிறுத்தை, மற்றும் செந்நாய் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வந்த வண்ணம் உள்ளன. 

பல்வேறு விலங்குகளின் நடமாட்டத்திற்கு மத்தியில் ராஜா கழுகுகளும் முகாமிட்டுள்ளதால்,  பவானிசாகர் அணையின் நீர்தேக்கம் பகுதியை விரைவில் சுற்றுலாத் தளமாக மாற்ற வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...