ரூ.50,000 க்கு மேல் நகை வாங்குவதற்கு பான் கார்டு, ஆதார் எண் கட்டாயமில்லை- மத்திய அரசு அறிவிப்பு

நாட்டின் வரிமுறையில் முக்கிய மாற்றமாகக் கருதப்படும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் சில திருத்தங்களை மேற்கொள்ள, உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்களிடமிருந்து மத்திய அரசுக்குக் கோரிக்கைகள் வந்தன. இதில் அந்தந்த மாநிலங்கள் சார்பில் நிதியமைச்சர்கள் பங்கேற்று, கோரிக்கைளைத் தெரிவித்தனர். மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் பல மணி நேரம் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் ஆலோசனைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நகை வாங்குவதற்கு பான் கார்டு, ஆதார் எண் அவசியம் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது. இனி நகை வாங்க பான் கார்டோ அல்லது ஆதார் எண்ணோ அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு நிதியாண்டில் 2 கோடி ரூபாய்க்கு மேல் நகை, விலையுயர்ந்த பொருட்கள் விற்கும் வர்த்தகர்கள், பண மோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கேஸ் ஸ்டவ் உள்ளிட்ட பல்வேறு நுகர்வோர் பொருட்களுக்கும், ஏ.சி. உணவகங்களில் சாப்பிடுவதற்கும் ஏற்கெனவே விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படுகிறது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...