மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க வலியுறுத்தி இளைஞரின் நீண்டதூர இருசக்கரவாகன பிரச்சாரம்

நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு சில மாநிலங்களில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுவதில்லை. 

இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க வலியுறுத்தி, கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சினான் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் நீண்ட தூர இருசக்கர வாகன பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் இருந்து இருசக்கர வாகனத்தின் மூலம் தனது பிரச்சாரப் பயணத்தை தொடங்கிய அவர், அண்டை நாடுகளான  பூடான், நேபாளம் உள்ளிட்ட நாடுகள் என மொத்தம் 16,000 கி.மீ தூரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.



கடந்த ஜுலை 30-ம் தேதி தொடங்கிய இந்த வாகனப் பிரச்சாரமானது, செப்டம்பர் 20-ம் தேதி நிறைவடைந்தது. இந்த நிலையில், மாற்றுத் திறனாளிகளின் அத்தியாவசிய தேவையை வலியுறுத்தி வாகனப் பிரச்சாரத்தை மேற்கொண்ட சினான் கோவைக்கு வந்தார். அவருக்கு ஏராளமான மாற்றுத்திறனாளிகள் மலர்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர். 

இவரது பயணம் குறித்து, கோவை மாற்றுத்திறனாளி அமைப்பினை சேர்ந்த ஒருவர் கூறுகையில், இவரது இந்த நீண்ட தூர வாகனப் பிரச்சாரத்திற்கு ஒவ்வொரு மாநில மாற்றுத்திறனாளிகளின் அமைப்பு உதவியது. மாற்றுத் திறனாளிகளினாலும் எந்த இடையூறுமின்றி வாகனம் ஓட்ட முடியும் என்பதை, சினான் நிரூபித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...