சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புக்கு மீண்டும் பொதுத் தேர்வு நடத்தப்படும் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு

மாநில பாடத்திட்டத்தை போலவே, சி.பி.எஸ்.இ. வழிக்கல்வியிலும் 10-ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தும் முறை அமலில் இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக அந்த நடைமுறை கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து கைவிடப்பட்டது. 

பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தாமல் இருப்பது சி.பி.எஸ்.இ. கல்வியின் தரத்தை பாதிக்கும் என்றும், நேரடியாக பிளஸ்-2 பொதுத்தேர்வை எதிர்கொள்வது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு சிரமமாக இருக்கும் என கல்வியாளர்கள் கூறி வந்தனர். 

இந்த நிலையில், ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியளர்களிடம் பேசுகையில், சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புக்கு மீண்டும் பொதுத் தேர்வு நடத்தப்படும். 5 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இறுதித் தேர்வில் தோல்வியடைந்தால், அவர்கள் மீண்டும் அதே வகுப்பு பயில வேண்டும்.  தோல்வியடையும் மாணவர்களின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

கல்வித்துறையில் மேற்கொண்டுள்ள இது போன்ற திட்டங்களுக்கு 25 மாநில அரசுகள் ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...