பரோலில் உள்ள சசிகலாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகை சரியாக பயன்படுத்தப்படுகின்றதா என்பதை கண்காணிக்க வேண்டும் - தமிழிசை

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், டெங்கு பாதிப்பு அதிகம் இருக்கும் மாநிலங்களில் முதல் மூன்று இடங்களில் தமிழகம் இருக்கின்றது. இது சாதரண சூழ்நிலையல்ல. தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கை போதுமானதாக இல்லை என தோன்றுகின்றது. டெங்கு காய்ச்சலை முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் கொண்டுவர வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். பாதிப்பு அதிகமாக இருக்கின்ற நிலையில் மத்திய அரசிடம் இருந்து டெங்கினை கட்டுப்படுத்த உதவிகளை தமிழக அரசு கேட்கலாம்.  என்றார். 

மேலும், உறுப்பு மாற்று சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் நடைபெறுவது குறித்து கண்காணிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முடக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் இடைதரகர்களின் செயல்பாடுகள் அதிகம் இருக்கிறது.  கோவையில் உள்ள மத்திய அரசின் அச்சகத்தின் தேவை குறைந்து இருப்பதால் அதில் பணி புரியும் தொழிலாளர்கள் இடம் மாற்றம் செய்யப்படுகின்றனர். ஊழியர்கள் யாரும் வேலை இழக்க கூடாது என்பது தங்களின் நிலைப்பாடு.  என தமிழிசை கூறினார். 

தொடர்ந்து அவர் பேசுகையில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பரோலில் வந்திருப்பதால் அரசியல் மாற்றம் ஏற்படக்கூடாது. அரசியல் மாற்றம்  ஏற்படாது என்பது தனது கருத்து. சசிகலாவிற்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகை சரியாக பயன்படுத்தப்படுகின்றதா என்பதை போலீஸார் கண்காணிக்க வேண்டும். 

கெயில் நிறுவன குழாய்கள் பதிப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க பிரதமர் வலியுறுத்தி இருக்கின்றார். அதையும்மீறி பொதுமக்கள்  அச்சப்படுகின்றனர் என்றால் மக்களின் உணர்வுகள் குறித்து மத்திய அரசு பரீசிலக்கும். முடிந்த வரை விளைநிலங்களில் இல்லாமல் பொதுஇடங்கள் வழியாக குழாய் கொண்டு செல்ல வலியுறுத்துவோம். 

எதிர்கட்சி தலைவருக்கு கொடுக்க வேண்டிய உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும். ஆளுநர் பதவி ஏற்பின்போது எதிர்கட்சி தலைவருக்கு உரிய மரியாதை கொடுக்காதது குறித்து கேள்விக்கு தன் எதிர்ப்பினை நேற்றே பதிவு செய்தேன். ஆளுநர் பதவி ஏற்பில் மரபு மீறி இருக்க கூடாது. அதிகாரிகள் தெரிந்து செய்கின்றனரா ? தெரியாமல் செய்கின்றனரா என தெரியவில்லை.  கோவையில் தீவிரவாத செயல்பாடுகளில்  இருப்பவர்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...