இந்தியாவில் அடியெடுத்து வைக்கும் ”ஆடி ஏ5” பிராட்பேக்

ஆடி இந்தியா நிறுவனம் ஏ5 ரகத்தில் 3 புதிய மாடல் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஏ5 ஸ்போர்ட்பேக், ஏ5 கேப்ரியோலெட், எஸ் 5 ஸ்போர்ட்பேக் என்ற சொகுசு கார்களை வெளியிட்டுள்ளது.



இந்த கார்களின் விலை முறையே ரூ.54.02 லட்சம், ரூ.67.15 லட்சம், ரூ.70.60 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஏ5 ஸ்போர்ட்பேக், ஏ5 கேப்ரியோலெட் ரகமும் இந்தியாவுக்கு புதிதாக அறிமுகமாகும் மாடல்கள் எனவும், எஸ் 5 மட்டும் அப்கிரேட் செய்யப்பட்ட ரகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



புதிதாக மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன், உயர் செல்திறன்மிக்க ஓட்டங்கள், புதுமை படைக்கும் பொழுதுபோக்கு அம்சத்துக்கான தீர்வுகள், வீர்ச்சுவல் காக்பிட் மற்றும் ஆடி இன்டர்பேஸ் மொபைல்போன் போன்ற சிறப்பம்சங்களுடன் இந்தக் கார்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 



ஆடி இந்தியாவின் தலைவர் ரகில் அன்சாரி கூறுகையில், ஆடியின் மறுகட்டமைப்பு ஆண்டாக 2017 உள்ளது. ஏ5 வகை இந்த புதிய சகாப்தத்தின் துவக்கம். புதிய மாடல், புதிய பிரிவுகளில் அறிமுகப்படுத்தி இந்தியாவில் சொகுசான ஒரு பயணத் தீர்வை உருவாக்கின்றனர்.  ஏ5 ஸ்போர்ட்பேக், ஏ5 கேப்ரியோலெட், எஸ் 5 ஸ்போர்ட்பேக் போன்ற கார்களை அறிமுகம் செய்வதன் மூலம் இந்தியாவில் 2017-ல் எங்களது அறிமுக இலக்கான 10 எண்ணிக்கையை எட்டி விட்டோம்.  என்றார். 



ஆடி கோயம்புத்தூர் முதன்மை டீலர் அனந்தகிருஷ்ணன் பேசுகையில், ஆடி ஏ5 இந்த மண்டலத்தில் சந்தைப்பங்கினை அதிகரிக்கும். அனைவரும் ஆவலுடன்  இந்த ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட தயாரிப்பு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...