இந்திய ராணுவ மேம்பாட்டிற்கு ரூ.10 கோடி வழங்கிய ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி

தனியார் துறையில் மிகவும் பிரபலமான மற்றும் பெரிய வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியானது, அதிகளவிலான பணப் பரிமாற்றம் மற்றும் சொத்துக்களை பாதுகாத்தல் உள்ளிட்டவைகளில் சிறந்து விளங்குகிறது.  இந்த வங்கியானது, கடந்த ஜுன் 30-ம் தேதி வரையில் அமெரிக்காவில் 153 மில்லியன் அளவிற்கு வாடிக்கையாளர்களின் சொத்துக்களை மேலாண்மை செய்து வருகிறது.  தற்போது இந்தியா உள்பட 17 நாடுகளில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி செயல்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், இந்திய ராணுவத்திற்கு ரூ.10 கோடி ரூபாயை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தத் தொகையை இரண்டு கட்டமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தற்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், முதற்கட்டமாக ரூ.5 கோடிக்கான காசோலையை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் சந்தா கோச்சார் வழங்கினார். 



அப்போது, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் சந்தா கோச்சார் பேசுகையில், நமது இந்திய ராணுவத்தினர் எல்லையில் தைரியமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியின் போது, ஒரு சில வீரர்கள் வீரமரணமும் அடைகின்றனர். அவர்களது இறப்பை எத்தனை நிதி கொடுத்தாலும் ஈடுகொடுக்க முடியாது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வழங்கியுள்ள நிதியின் மூலம், உயிரிழந்த ராணுவ வீரர்களின் மகள்களின் ஆதரவுக்காகவும், முன்னாள் ராணுவ வீரர்களின் மனைவிகளை மேற்படிப்பு படிக்க உதவி செய்யப்படும். மேலும், முன்னாள் ராணுவ வீரர்களின் மகள்களின் திருமணங்களும் நடத்த நிதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...