'ஆன் - லைனில்' பட்டாசு : டில்லிவாசிகள் ஆர்வம்

டில்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிகளில், அக்., 31 வரை, பட்டாசு விற்பதற்கு தடை விதித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதால், 'ஆன் - லைன்' மூலம், பட்டாசு வாங்கும் முயற்சியில், டில்லி மக்கள் இறங்கி உள்ளனர். 

டில்லியில், காற்றின் மாசைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, டில்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிகளில், பட்டாசு விற்பனைக்கு, உச்ச நீதிமன்றம், 2016ல், தடை விதித்திருந்தது. சமீபத்தில், இந்த தடையை நீக்கிய உச்ச நீதிமன்றம், நேற்று முன்தினம், அக்., 31 வரை, டில்லியில், பட்டாசுகள் விற்பதற்கு தடை விதிப்பதாக உத்தரவிட்டது.

டில்லியில், 19ல், தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவில், பட்டாசு வெடிப்பது குறித்து, ஏதும் கூறப்படவில்லை. அதனால், அண்டை மாநிலங்களில் இருந்தும், ஆன் - லைன் மூலமாகவும், பட்டாசு வாங்குவது அதிகரித்துள்ளது.

இது குறித்து, வழக்கறிஞர்கள் கூறியதாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்பில், பட்டாசு விற்பனை குறித்து மட்டுமே கூறப்பட்டுள்ளது. ஆன் - லைன் மூலமாக வாங்குவதிலும் சிக்கல் உள்ளது. விற்பனை செய்யும் நிறுவனம், பெங்களூரில் செயல்பட்டாலும், விற்பனை செய்யக்கூடிய இடம் டில்லி என்பதால், அதற்கு தடை உள்ளது. அதே போல், டில்லியில் இருந்து செயல்படும், ஆன் - லைன் நிறுவனம், எந்த ஊருக்கும் பட்டாசுகளை விற்பனை செய்ய முடியாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...