சரவணம்பட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடுகட்டியவர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடுகட்டியவர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அளித்துள்ளது. 

கோவை மாகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் கோவை மாநகராட்சியில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் ஆக்கிரமிக்கப்பட்ட பொது ஒதுக்கீடு இடங்களை மாநகராட்சி நகரமைப்பு பிரிவின் சார்பில் வாரந்தோறும் ஆய்வு செய்து மீட்டு மாநகராட்சி பெயர் பலகை வைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று (அக்.,14) கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.32, விளாங்குறிச்சி, ஸ்ரீ தனலட்சுமி நகர் பகுதியில் உள்ள 35 சென்ட் பரப்பும், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.16, வடவள்ளி, பவன் பூங்கா, பார்க் சைட் 1 மற்றும் 2 (புதிய தில்லை நகர் விரிவாக்கம்) பகுதியில் உள்ள 17.65 சென்ட் பரப்பும், வார்டு எண்.19, வீரகேரளம் ராஜூ நாயுடு லேஅவுட் பகுதியில் உள்ள 10.67 சென்ட் பரப்பும், அதே பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 10.71 சென்ட் பரப்பளவிற்கான இடத்திற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.28, சரவணம்பட்டி, ஸ்ரீ சக்தி கார்டன் ( பகுதி 2) பகுதியில் உள்ள 18 சென்ட் பரப்பும் மற்றும் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குறிச்சி, வார்டு எண்.98 இளங்கோவன் நகர் ( பார்க் சைட்1 மற்றும் 2 ) பகுதியில் உள்ள 25 சென்ட் பரப்பும், ஆகமொத்தம் 106.32 சென்ட் பரப்பளவிலான பொது ஒதுக்கீடு இடங்கள் சுத்தம் செய்யபட்டு மாநகராட்சி பெயர் பலகை வைக்கப்பட்டது. 

மேலும், தொடர்ந்து கோவை மாநகராட்சியில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் அமைந்துள்ள ஆக்கிரமிக்கப்பட்ட பொது இடங்களை தொடர்ச்சியாக ஆய்வு செய்து மீட்க்கப்படுவதற்கான உரிய நடவடிக்கைகள் மாநகர நகரமைப்பு பிரிவின் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...