”பசுமை தீபாவளி” கொண்டாடுபவர்களுக்கு மாநகராட்சி சார்பில் பரிசு அறிவிப்பு

சுத்தமான மற்றும் பசுமையான தீபாவளி கொண்டாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் ‘பசுமை தீபாவளி’ கொண்டாடும் நபர்களுக்கு பாராட்டி பரிசளிக்கப்படும் என கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

தீபாவளி பண்டிகையையொட்டி சுற்றுசூழல் மாசுபடாமல் பாதுகாக்க, சுத்தமான மற்றும் பசுமையான தீபாவளி கொண்டாடுவதை ஊக்குவிக்கும் வகையில், ”பசுமையான தீபாவளி” கொண்டாட கோவை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும், குடியிருப்பு சங்கங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு மாநகராட்சி சார்பாக பாராட்டி பரிசுகள் வழங்கப்படவுள்ளது. 

இது சம்பந்தமாக பசுமை தீபாவளியை கொண்டாடிய அனுபவங்களை புகைப்படங்களாகவோ அல்லது வீடியோப் பதிவாகவோ வாட்ஸ்ஆப் எண். 8190000400-ல் வரும் திங்கட்கிழமை வரை அனுப்பலாம் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. 

மேலும், கோவை மாநகராட்சியின் சுத்தமான மற்றும் பசுமையான தீபாவளி முயற்சிக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து தீபாவளியை பசுமையான தீபாவளியாக கொண்டாடுமாறு மாநகராட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...