கயிறுப்பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஜப்பான் ஒப்புதல் - கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தகவல்

கயிறுப்பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஜப்பான் ஒப்புதல் அளித்திருப்பது கயிறு வாரியத்தின் கடந்த மூன்று ஆண்டு முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச கயிறு கண்காட்சியில் பங்கேற்றுவிட்டு விமானம் மூலம் கோவை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் பேசுகையில், கயிறு தொழிலில் உள்ள பல நுட்பமான விஷயங்கள் மற்றும் இயற்கை உரங்கள் ஆகியவை குறித்து கண்காட்சி மூலம் அறிய முடிந்தது. இதன்மூலம் கயிறு பொருட்கள் ஏற்றுமதி பன்மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கயிறு பொருட்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டு ரூ.1,630 கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ரூ.2,860 கோடியாக உயர்ந்துள்ளது. எதிர்காலத்தில் ரூ.20,000 கோடி என்ற அளவுக்கு மாறி மிகப்பெரிய பொருளாதார சந்தையாக இந்தியா மாறும். மேலும், கடுமையான வறட்சி காரணமாக இந்த ஆண்டு கயிறு உற்பத்தி மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியிருந்தும். சர்வதேச அளவில் 80 சதவீதத்தை தக்க வைத்து இந்தியா முன்னனியில் உள்ளது. 

இதேபோல, நிதி ஒதுக்கீட்டை பொறுத்தவரை கயிறு வாரியம் என்றாலே கடந்த ஆண்டு வரை ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், அதனை இந்த ஆண்டு ரூ.500 கோடியாக பிரதமர் மோடி மாற்றியுள்ளார்.  கயிறு வாரியத்தின் கடந்த மூன்று ஆண்டு முயற்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இந்தியாவுடன் இணைந்து கயிறு பொருட்கள் உற்பத்தியில் கூட்டு முயற்சிக்கு ஜப்பானியர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.  முதல் முறையாக ஜப்பானின் ஆர்டர் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...