திருச்சியில் இருந்து கிருஷ்ணராஜபுரத்திற்கு சிறப்புக் கட்டண ரயில் இயக்கம்


திருச்சி - கிருஷ்ணராஜபுரம் (பெங்களூரு) இடையே சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு செல்வோரின் வசதிக்காக, திருச்சி - கிருஷ்ணராஜபுரம் (பெங்களூரு) இடையே சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர், நாமக்கல், சேலம் வழியாக இந்த ரயில் இயக்கப்படுகிறது. 

திருச்சியில் இருந்து நாளை (அக்.,17) காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் எண் - 06049, பிற்பகல் 2.30 மணியளவில் கிருஷ்ணராஜபுரம் சென்றடைகிறது. 

இதில், ஒரு குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், ஸ்லீப்பர் வசதியுடன் 17 பெட்டிகளும், பொதுப் பிரிவில் 2 மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல 2 பெட்டிகளும் என மொத்தம் 21 பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ரயிலானது, குளித்தலை, கரூர், நாமக்கல், சேலம் மற்றும் பங்கராபேட்டை போன்ற நிறுத்தங்களில் நிறுத்தப்படும். திருச்சி - கிருஷ்ணராஜபுரம் (பெங்களூரு) ரயிலுக்கான முன்பதிவு இன்று மாலை 5.30 மணியில் இருந்து நடைபெற்று வருகிறது. 

இதேபோல, ரயில் எண் - 82638 கோவை - சென்னை இடையிலான சுவிதா சிறப்பு ரயில் (ஒருவழி) கோவையில் இருந்து வரும் 22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 7.10 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் அதிகாலை 03.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைகிறது. 

இதில், ஒரு குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், ஸ்லீப்பர் வசதியுடன் 18 பெட்டிகளும், பொதுப் பிரிவில் 3 மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல 2 பெட்டிகளும் என மொத்தம் 23 பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த ரயிலானது, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் மற்றும் பெரம்பூர் நிறுத்தங்களில் நின்று செல்லும். இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...