சேலம் - ஜோலார்பேட்டை மார்க்கமான ரயில்களின் நேரம் தற்காலிகமாக மாற்றியமைப்பு

வரும் அக்டோபர் 19-ம் தேதி முதல் நவம்பர் 7-ம் தேதி வரை சேலம் - ஜோலார்பேட்டை மார்க்கமான ரயில்களின் நேரம் தற்காலிகமாக மாற்றியமைக்கப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

சேலம், ஜோலார்பேட்டை மார்க்கத்தில் புத்திரெட்டிபட்டி மற்றும் பொம்மிடி பகுதிகளுக்கு இடையிலான ரயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால், சேலம், ஜோலார்பேட்டை மார்க்கமாக இயக்கப்படும் ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே விடுத்துள்ள அறிக்கையில், 

செவ்வாய்கிழமை (அக்., 24, 31 மற்றும் நவம்.,07) நாட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் :

 

ரயில் எண் : 22815, பிலாஷபூர் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் 38 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. பிற ரயில்களின் தாமதத்தினால், 20 நிமிடங்கள் ஜோலார்பேட்டை நிறுத்தத்திலும், 18 நிமிடங்கள் புத்திரெட்டிபட்டி நிறுத்தத்திலும் நிறுத்தப்படுகிறது. 

புதன்கிழமை (அக்.,19, 26 மற்றும் நவம்.,02) நாட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் :

பிற ரயில்களின் தாமதத்தினால், ரயில் எண் : 22619, பிலாஷபூர் ரயில் நிறுத்தத்தில் இருந்து பிலாஷபூர் திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் 70 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. 

வியாழக்கிழமை (அக்.,19, 26 மற்றும் நவம்.,02) நாட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் :

ரயில் எண் : 12970, ஜெய்ப்பூர் கோவை எக்ஸ்பிரஸ் 38 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. பிற ரயில்களின் தாமதத்தினால், 20 நிமிடங்கள் ஜோலார்பேட்டை நிறுத்தத்திலும், 18 நிமிடங்கள் புத்திரெட்டிபட்டி நிறுத்தத்திலும் நிறுத்தப்படுகிறது. 

இதேபோல, 16360, பாட்னா எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. பிற ரயில்களின் தாமதத்தினால், 10 நிமிடங்கள் ஜோலார்பேட்டை நிறுத்தத்திலும், 10 நிமிடங்கள் புத்திரெட்டிபட்டி நிறுத்தத்திலும் நிறுத்தப்படுகிறது. 

ஞாயிற்றுக்கிழமை (அக்.,22, 29 மற்றும் நவம்.,05) நாட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் :

ரயில் எண் : 07115, ஐதராபாத் கொச்சிவெலி சிறப்பு ரயில் 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. பிற ரயில்களின் தாமதத்தினால், 20 நிமிடங்கள் ஜோலார்பேட்டை நிறுத்தத்தில் நிறுத்தப்படுகிறது. 

இவ்வாறு, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...