எஸ்.ஏ.சி.ஓ.என் மையத்திற்கு வழங்கப்பட்டு வரும் மத்திய அரசின் நிதி நிறுத்தம் - எஸ்.ஏ.சி.ஓ.என் இயக்குநர் மறுப்பு

சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையத்திற்கு (எஸ்.ஏ.சி.ஓ.என்)  வழங்கப்பட்டு வரும் மத்திய அரசின் நிதி, நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல, வெறும் வதந்தி என அதன் இயக்குநர் சங்கர் தெரிவித்துள்ளார். 

மும்பையைச் சேர்ந்த பிரபல பறவையியல் ஆராய்ச்சியாளர் சலீம் அலி புகழைப் போற்றும் வகையில் கடந்த 1990 ஆம் ஆண்டு சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையம் கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் செயல்பட்டு வருகிறது.  மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த பறவையியல் ஆராய்ச்சி மையத்திற்கு, ஆண்டுதோறும்  நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையத்திற்கான மத்திய அரசின் நிதி நிறுத்தப்பட்டு விட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், இந்த தகவலை, எஸ்.ஏ.சி.ஓ.என் மையத்தின் இயக்குநர் சங்கர் மறுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்த ஆராய்ச்சி மையம் ஆரம்பிக்கப்பட்டது முதல் தற்போது வரை மத்திய வனம் மற்றும சுற்றுச்சூழல் துறையின் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. எங்களது ஆராய்ச்சி மையமானது பல்வேறு திட்டங்களை கொண்டுள்ளது. அவற்றிற்கு மத்திய அரசுதான் நிதி வழங்குகிறது. ஒருசில திட்டங்கள், மத்திய வனம் மற்றும சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

நாடு முழுவதும் உள்ள முதன்மையான பறவையியல் ஆராய்ச்சி மையங்களில், சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையமும் ஒன்று. மொத்தம் 54.7 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மையமானது ஆனைகட்டி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. எஸ்.ஏ.சி.ஓ.என் மையத்திற்கு வழங்கப்பட்டு வரும் மத்திய அரசின் நிதி நிறுத்தப்பட்டிருப்பதாக வெளியான தகவல்கள் வதந்தி. இதனை யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு  அவர் கூறினார். 

Newsletter

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...